அக்கா புருஷனை தீர்த்துக்கட்டிய தம்பி

by Admin / 01-02-2022 05:08:48pm
அக்கா புருஷனை தீர்த்துக்கட்டிய தம்பி

திருப்பூர் மாவட்டம் தென்னங்கரைபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவர், மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். 

செந்தில்குமாரின் மனைவி சங்கீதாவிற்கும், சங்கீதாவின் தம்பியான தீபன் குமாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது 

இதற்கிடையில் நாளை நடைபெற இருந்த விசேஷத்திற்கு அழைக்க உறவினர்கள் வீட்டிற்கு தம்பதியான செந்தில்குமார் மற்றும் சங்கீதா சென்றதாக சொல்லப்படுகிறது

சங்கீதாவின் தீபன் குமார் அவரது அக்கா மற்றும் அக்காவின் கணவரிடம் சொத்து தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார்.
 
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தீபன்குமார் அவரது அக்காவின் கணவரை தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செந்தில்குமாரின், தலையில் அருகே கிடந்த கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் தீபன்.

இது குறித்து செந்தில்குமாரின் மனைவி சங்கீதா ஊதியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்  போலீசார் வழக்குபதிவு செய்து கொலை குற்றவாளியான தீபன் குமாரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via