அதிமுக பிரமுகர்கள் கட்சியில் இருந்துநீக்கம்.

by Editor / 09-02-2022 11:37:47am
அதிமுக பிரமுகர்கள் கட்சியில் இருந்துநீக்கம்.

தமிழகத்தில் 4 மாவட்ட அதிமுக நிர்வாகிகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சியின் கொள்கைகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராமானுஜம் , கணேசன், சே பாலசுப்பிரமணியன், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கரிகாலன், ரமேஷ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகரச் செயலாளர் அன்பு சாமி, டி ஆர் சீனிவாசன், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் கண்ணாயிரம், கபீர், உடுமலைப்பேட்டை குமரேசன் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரியப்படுத்தி உள்ளனர்.

 

Tags : admk

Share via