1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுமார் 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மீனவ மகளிர், கட்டுமான மகளிர், சிறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் போன்றவர்கள் இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள். அரசு அங்கீகரித்தால் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் சூழல் உருவாகும். மாதம் ரூ.1,000 என்பது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் கிடைக்கும். மகளிர் உரிமைத்தொகை குறித்த, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். பெண்கள் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத் தான் மகளிர் உரிமைத் திட்டம் என்று கூறினார்.
Tags :