இலங்கையில் அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக கோரி வலுக்கும் போராட்டம்

by Staff / 15-04-2022 11:55:48am
இலங்கையில் அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக கோரி வலுக்கும் போராட்டம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் ராஜபக்சே பதவி விலக கோரி கொழும்பு நகரின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமான அளவில் போராட்டம் நடைபெற்றது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு உள்ளதால் உணவு பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. பெட்ரோலியப் பொருள்களுக்கு மின்சாரத்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது இலங்கையில் புத்தாண்டு தொடங்கிய மகிழ்ச்சியை கொண்டாட வில்லை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன நிலைமையை கையாளத் தெரியாத கோத்தபாய பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திய அவர் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொழும்பு நகரில் பிரமாண்டமான அளவில் போராட்டம் தீவிரமடைந்து. பெருமளவில் மக்கள் திரண்டு நகரின் பல்வேறு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனிடையே இலங்கையின் எதிர்க்கட்சியினர் கோத்தபய ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளனர்.

 

Tags :

Share via