பிணமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவி

by Admin / 12-02-2022 02:34:08pm
 பிணமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவி

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடா பகுதியை சேர்ந்தவர் ஜோதி பிரகாஷ் என்பவரின் மகள் சந்தியா இவருக்கு வயது 19 . இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். 

சம்பவத்தன்று காலை வீட்டில் படுத்திருந்த சந்தியா காணவில்லை என அவரை உறவினர்கள் அக்கம் பக்கம் சென்று தேடியுள்ளனர். சந்தியா அவர்களது கண்களில் தென்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு அருகில் உள்ள கிணறு ஒன்றில் சந்தியா இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.  

 தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் கிணற்றுக்குள் கிடந்த மாணவியின் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். 

மாணவி கிணற்றுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து திருச்சூர் பகுதி காவல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Tags :

Share via