வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவந்த பேருந்து கவிழ்ந்தது.-குழந்தை உயிரிழப்பு.
ஆந்திராவில் இருந்து 45 சுற்றுலாப்பயணிகளோடு வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த தனியார் பேருந்து திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த வீட்டின் மேல் பேருந்து மோதியதில் பேருந்து தலை கீழாக கவிழ்ந்தது.பேருந்து கவிழ்ந்ததில்
பேருந்துக்குள் சிக்கி 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.இரண்டு தீயணைப்பு மீட்பு வாகனங்கள் மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.விபத்தை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்க திரண்டதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :