மழை வெள்ளம் நிலச்சரிவினால் 36 பேர் பலி

by Staff / 20-02-2023 02:56:44pm
மழை வெள்ளம் நிலச்சரிவினால் 36 பேர் பலி

பிரேசிலில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கனமழையால் பல்வேறு நகரங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை மீட்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via