பலாத்கார வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி கைது

by Staff / 29-02-2024 11:36:53am
பலாத்கார வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி கைது

மேற்குவங்கத்தின் சந்தேஷ்காலியில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜஹான் ஷேக், அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்யக்கோரி 50 நாட்களாக போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில், ஷேக் ஷாஜகானை இன்று அதிகாலை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. ஆதாரங்களின்படி, அவர் காலை ஏழு மணியளவில் பாசிர்ஹாட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நண்பகல் 12 மணிக்குப் பிறகு ஷாஜகான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். சந்தேஷ்காலி சம்பவத்தின் 55 நாட்களுக்குப் பிறகு ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via