இணைய சேவையை முடக்கியது இஸ்ரேல்

by Staff / 14-10-2023 12:47:50pm
இணைய சேவையை முடக்கியது இஸ்ரேல்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 7-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அந்நகரை விமானம் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காஸா பகுதியில் இருந்து அப்பாவி மக்களை வெளியேற விடாமல் தடுப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் ஹமாஸ் ஆயுதக்குழுவின் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காஸாவில் இணைய சேவையை இஸ்ரேல் முடக்கியது. தொலைதொடர்பு கருவிகளை அழித்ததால், 20 லட்சம் பேர் இணைய சேவையின்றி தவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via