உலக வங்கி பொருளாதார உதவி அளிக்க தயார்
ரஷியா படையெடுப்பால் உக்ரைன் தலைநகர் கீவில் கடும் போர் பதற்றம் காணப்படுகிறது. இதையடுத்து கீவ் நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என அம்மாகாண மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவின்போது பொது போக்குவரத்து இயங்காது. மெட்ரோ நிலையங்களை தங்குமிடங்களாக பொதுமக்கள் 24 மணி நேரமும் பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவினால் அனைத்து ஊழியர்களும் சரியான நேரத்தில் வீடு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு தேவையான பொருளாதார உதவிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது.
Tags :