4500 கோடி நிதி உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல்
உக்ரைனுக்கு பாதுகாப்புத்துறை உதவியாக 4,500 கோடி ரூபாய் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
உக்ரைன் மீது இராணுவம் மூன்றாம் நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கும் கோப்புக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதில் போர்க்கருவிகள் வாங்கவும் ராணுவ பயிற்சிகளுக்கு கல்விக்கும் உக்ரைனுக்கு 2627 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 1873 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கவும் வெளியுறவு அமைச்சர்களுக்கு அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்
Tags :