உக்ரைனில் 198 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்.

by Editor / 26-02-2022 05:41:15pm
உக்ரைனில் 198 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்.

உக்ரைன் மீது ரஷியா 24ஆம் தேதி  படையெடுத்து தாக்குதலை தொடங்கி நடத்திவருகிறது. இன்று 3வது நாளாக பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. நேற்று மட்டும் 200-க்கும் மேற்பட்ட தரைவழி,வான்வெளி உள்ளிட்ட பல்வேறு கட்டத்தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது. என உக்ரைன் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்தது.

உக்ரைன் தலைநகர் கீவில் நுழைந்த ரஷிய படைகள், ஆயுதங்களை கொண்டு பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கீவ் நகரில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய படை ஏவுகணை கொண்டு தாக்கியது. இதில், குடியிருப்பு சேதம் அடைந்துள்ளது. குடியிருப்புக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.3வது நாள் தாக்குதலில்  குழந்தைகள் உள்பட 198 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

உக்ரைனில் 198 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்.
 

Tags : 198 people are reported to have been killed in Ukraine.

Share via