ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை. உடல்கள் உறவினரிடம் ஒப்படைக்க முடிவு

by Staff / 16-07-2023 02:09:30pm
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை. உடல்கள் உறவினரிடம் ஒப்படைக்க முடிவு

வில்லுக்குறி அருகே உள்ள கீழ பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை. இவரது மகன் பாபு (வயது 46), பெயிண்டர். இவர் கடந்த 8 ஆண்டுகளாக ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருடன் அவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38) ஆகியோரும் வசித்து வந்தனர். சகோதரிகள் 2 பேருக்கும் திருமணம் ஆக வில்லை. இந்த நிலையில் 3 பேர் தற்கொலை செய்தனர்.
3 பேரின் உடலை போலீசார் யாரிடம் ஒப்ப டைப்பது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்ட னர். அவரது உறவினர்கள் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.விசாரணை யில் திடீர் திருப்பமாக பாபுவிற்கு திருமணமாகி இருப்பது தெரியவந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இதையடுத்து போலீசார் பாபுவின் மனைவி எங்கு உள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த நிலையில் பாபுவின் மனைவியை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் பாபு உட்பட அவரின் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை தெரிவித்தனர். உடலை ஒப்படைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டனர். இறந்தவர்கள் உடலை இறுதிச் சடங்கு செய்ய பாபுவின் மனைவி ஒப்புக் கொண்டார். போலீசார் உடல் களை பாபுவின் மனைவியிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இன்று 3 பேர் உடலும் பாபுவின் மனைவியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் அவரது உறவினர்கள் உதவியுடன் இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.

 

Tags :

Share via