ஃப்ரீசர் பாக்ஸ் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

by Staff / 24-05-2023 12:58:54pm
ஃப்ரீசர் பாக்ஸ் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

திண்டுக்கல்:மாவட்டம்  பழனியைச் சேர்ந்தவர் யுவராஜா(38). திருமணமாகாமல் தனியாக வசித்து வந்தார். இவரது நண்பர் அழகேசன் (30) கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அழகேசன் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த யுவராஜா, ஃப்ரீசர் பாக்ஸ் அருகே சென்ற போது, அதிலிருந்து மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் யுவராஜாவை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். துக்க வீட்டில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via