நித்தியானந்தாவுக்கு சிகிச்சைக்கு அனுமதியளிக்க இலங்கை அரசுக்கு கடிதம்
நாட்டில் அதிரடி ஆன்மிகவாதியாக விளங்கிவரும் பிரபல சாமியாரான நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக அவர் காவல்துறையினாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் நிலையில் நித்யானந்தா கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பி கைலாசாவில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே நித்யானந்தா உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் மொரீசியஸ் நாட்டில் மருத்துவ சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மேலும் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதி வழங்குமாறு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நித்யானந்தாவின் தரப்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
அதில், "ஸ்ரீ நித்யானந்தா பரமசிவனுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும். கைலாசாவில் நித்யானந்தாவிற்கு போதிய சிகிச்சை அளிக்க முடியாத சூழல் உள்ளதாகவும், அவருக்கு ஏற்பட்டு உள்ள உடல்நிலை குறைபாட்டை சரி செய்ய இலங்கைஅரசு அனுமதி அளிக்க வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடிதத்திற்கு இன்னும் இலங்கை அரசு தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.
Tags :