இரவு ஒன்பது மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை மிக கன மழை பெய்யும்
சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளுர் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு ஒன்பது மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில்,8-00 மணியிலிருந்து தூரலாக இருந்த மழை 8.30 இடி மின்னலுடன் கூடிய கனத்த மழையாகப்பெய்யஆரம்பித்தது.இதனால்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரோடுகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதால்வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாயினர்.வானிலை மோசமாக இருந்ததால் ,சென்னை வந்த சர்வ தேச
விமானங்கள் பெங்களுரூ விமானநிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன்.நிலைமை சீரானதும் விமானங்கள் சென்னைக்குவந்து செல்லும் என்ற தகவலை தெரிவித்துள்ளது விமான நிலையம்.
Tags :