அனைவருக்கும்  பதவிகளை  -சிறப்புகளை வழங்கியவர் சசிகலா என்கிற சக்திதான்.

by Admin / 05-03-2022 09:56:56am
அனைவருக்கும்  பதவிகளை  -சிறப்புகளை வழங்கியவர் சசிகலா என்கிற சக்திதான்.

 

அ.தி.மு.கவிற்குள் சசிகலா விடுதலையிலிருந்தே சலசலப்புகள் ஆரம்பித்து விட்டன.ஒற்றை தலைமை
இல்லாமல் இருவர் தலைமையில் இயங்கும் அ.திமு.க என்ன தான் வலிமையாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும்
கண்ணுக்குத்தெரியாத விரிசல் விழுந்து கொண்டிருந்ததை-காதுகளுக்கு முனகல்களும் முணுமுணுப்பு ஒலிகளும்
கேட்காமலுமில்லை.சசிகலாவின் தீடீர் தீடீர் அறிக்கைகளுக்கு  இது ஒரு புஷ்வானம் அ.தி.முக.தொண்டர்கள்
சசிகலாவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்-அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என்று கட்சியின் முக்கிய இரண்டாம் மட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்தாலும் அவர்களின் உள்ளுக்குள்ளே பயம் அப்பிக்கொண்டுதான் உள்ளது.இன்றைக்கு பேசுகிற அத்தனை பேருக்கும் பேச குரல்ஒலியை வழங்கியவரே சசிகலாதான் என்பது அரசியல் உலகில் அறியாதவர் எவருமில்லை. ெஜயலலிதா என்கிற ஆளுமையை நேரில் நின்று பேச பயந்தவர்கள் அனைவருக்கும்  பதவிகளை  -சிறப்புகளை வழங்கியவர் சசிகலா என்கிற சக்திதான்.
இன்றைக்கு அ.தி.மு.கவின் தோல்விக்கு சரியான தலைமை இல்லை என்கிற எண்ணம் தொண்டர்களிடமிருந்து கிளர்தெழுந்து அது தன்னை நாடி வரும் என்று கணித்து காத்திருந்த சசிகலாவிற்கு இப்பொழுது கனிந்துகொண்டிருக்கிறது. சசிகலாவின் கடைக்கண் பார்வை பட்டு அமைச்சர்,கட்சியின் மாவட்டச்செயலாளர் பதவிகளை பெற்றோர் சசிகலாவுக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் இறங்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதன் தொடக்கப்புள்ளியை  தூத்துக்குடி-திருச்செந்தூா்யில் வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ்ஸின் சகோதரர்.  இனி போக போக  அ.தி.மு.கவிற்குள்  சசிகலாவிற்கான  ஆதரவு கோஷங்கள்  ஒலிக்கத்தொடங்க  நாள் குறிக்கப்பட்டு விட்டது.

 

Tags :

Share via