மின்சாரம் தாக்கி தீப்பிடித்ததில் டிரைவர் பலி

by Admin / 06-03-2022 12:43:38pm
மின்சாரம் தாக்கி தீப்பிடித்ததில் டிரைவர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மீசான் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி இயங்கி வருகிறது. 

இங்கு மற்ற கம்பெனிகளில் இருந்நு கெமிக்கல் வரவழைத்து அதை ஆர்டரின் பேரில் வெளி கம்பெனிகளுக்கு வினியோகம் செய்து வருகிறது.

இந்த கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வருபவர் வந்தவாசியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் வசந்தகுமார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கம்பெனியில் பணியாற்றி வருகிறார். 

இன்று காலை கம்பெனிக்கு வெளியில் நிறுத்தியிருந்த மினி கன்டெய்னர் லாரியை பின் நோக்கி ஓட்டும்போது  அருகில் உள்ள டிரான்ஸ்ஃபாமர் வயரில் லாரியின் பின்புறம் டச் ஆனதால் அதிவேக மின்சாரம் பாய்ந்ததால் முதலில் டிரைவர் வசந்தகுமார் மீது  மின்சாரம் தாக்கி பற்றி எரிய துவங்கியதும் தப்பிப்பதற்காக கீழே குதித்ததார்.

லாரி  முழுவதும் தீப்பற்றி டயரை ஒட்டி கீழேவிழுந்து மள மளவென தீ பரவி உடல்முழதும் வெந்துபோய் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

மறைமலைநகர் காவல்நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் வசந்தகுமார் இறந்துபோன சம்பவத்தால் அவரது நண்பர்கள் குடும்பத்தினருக்கு   சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via