தனித்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால் அறிவிப்பு

by Staff / 10-02-2024 04:22:19pm
தனித்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மற்றும் சண்டிகரில் இண்டியா கூட்டணியில் நாங்கள் போட்டியிடவில்லை. ஆம் ஆத்மி தனித்து போட்டியிட உள்ளது. எல்லா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என கூறியுள்ளார். ஏற்கனவே நிதிஷ்குமார் இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த நிலையில், மம்தாவும் மேற்குவங்கத்தில் தனித்து போட்டி என அறிவித்திருந்தார். இதன் மூலம் இண்டியா கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via