ரூ.2 இலட்சத்தை ஒப்படைத்த செய்தியாளருக்கு பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு.

by Editor / 06-03-2022 02:18:40pm
ரூ.2 இலட்சத்தை ஒப்படைத்த செய்தியாளருக்கு பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு.

சென்னை  எம்ஜிஆர் நகர், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையம் வழியாக இருசக்கரவாகனத்தில் சென்ற  பாலிமர் தொலைக்காட்சி நிருபர்  கார்த்திக் எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையத்தை பார்வையிட்டபோது காட்டாக ஏதோ கிடைப்பதைக்கண்ட அவர் ஏடிஎம் இயந்திரம் அருகே சென்று பார்த்துள்ளார்.2 பண்டல் கிடந்ததைக்கண்டு அதனை எடுத்து பார்த்தபோது 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது.அவர்உடனடியாக அந்தப்பகுதி  போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த எம்ஜிஆர் நகர் எஸ்.ஐ ராஜ பாரதி மற்றும் போலீசார் வசம் கீழே கிடந்தது எடுத்த பணத்தை பத்திரமாக ஒப்படைத்தனர். வங்கி ஏடிஎம் மையத்தில் கிடந்த ரூபாய்.2 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை  அறிந்த  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்  பாலிமர் தொலைக்காட்சி நிருபர்  கார்த்திக்கை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

Tags : Metropolitan Police Commissioner praises journalist for handing over Rs 2 lakh

Share via