பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து சேதம் அச்சத்தில் மாணவர்கள்
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து சேதம் அச்சத்தில் மாணவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே சடைய முனியன் வலசை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழுந்து உள்ளதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் அடைந்து வருகின்றன இதனால் பள்ளியில் மாணவரின் வருகை பதிவு குறைந்துள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சடையன் முனியன் வலசை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்டப்பட்டது தற்போது அந்த அரசு பள்ளியை கட்டிடம் சேதமடைந்து மேற்கூரை சரிந்து இடிந்து விழுந்துள்ளது இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்
பள்ளி கட்டிடம் மேற்கூரை விழுந்து உயிரிழப்பு ஏற்படும் முன் மாணவரின் நலன் கருதி புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மாணவர்களின் பெற்றோர்கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags :