கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த பெட்டி  கடைக்கு சீல். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

by Staff / 16-11-2022 02:58:56pm
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த பெட்டி  கடைக்கு சீல். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

திருவாரூர் மாவட்டம் தட்டாங் கோவில் அருகில் பெட்டி கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது அதனைத் தொடர்ந்து இது செய்தியாகவும் ஊடங்களில் வெளிவந்தது.இதனையடுத்து கோட்டூர் காவல்துறையினர் கடை உரிமையாளர் நட்சத்திரமேரியை கைது செய்தனர். 

அதனைத் தொடர்ந்து  திருத்துறைப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்தப் பெட்டி கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

 

Tags :

Share via