சரக்கு வாகனம் மீது மோதி விபத்து

by Admin / 12-03-2022 11:10:46am
சரக்கு வாகனம் மீது மோதி விபத்து

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வாடிப்பட்டி குமரன் நர்சரி கார்டன் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர் சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்று மதுரை வாடிப்பட்டி நான்கு வழிச்சாலை கடப்பதற்காக சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி பல்சர் வாகனத்தை அதி வேகமாக ஓட்டி வந்த அருண் என்ற இளைஞர் சரக்கு வாகனத்தின் பின்னால் பயங்கரமாக மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

Tags :

Share via

More stories