முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் சந்திப்பு.

by Editor / 12-03-2022 01:19:36pm
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன்  ஓ.பி.எஸ்,இ.பி.எஸ்  சந்திப்பு.

3 வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கபட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நேற்று  நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் நேற்று  சிறை விதிமுறைகளுக்குட்பட்டு அவரை சிறை நிர்வாகம் இன்று காலை வெளியே செல்ல அனுமதியளித்ததைத்தொடர்ந்து இன்று காலை புழல் சிறையிலிருந்து வெளியே வந்த அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது வீட்டுக்கு சென்றார்,அவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் அவரது  இல்லத்தில் சந்தித்தனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன்  ஓ.பி.எஸ்,இ.பி.எஸ்  சந்திப்பு.
 

Tags : OPS, EPS meeting with former minister Jayakumar.

Share via