13 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

by Editor / 22-03-2022 10:13:49pm
13 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

தமிழகத்தில் இன்று 13 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பத்ரிநாராயணன் ஐபிஎஸ் இன்று மாற்றப்பட்டுள்ளார் அவருக்கு பதிலாக சென்னை டி நகர் உதவி கமிஷனராக பணியாற்றிய ஹரிகரன் பிரசாத் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக இருந்த பத்ரிநாராயணன் கோவை மாவட்ட எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியாக இருந்த சுகுணா சிங் செங்கல்பட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

13 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்
 

Tags : Transfer of 13 District Superintendents of Police

Share via