டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயம் திராவிடக்கோட்டை
டெல்லியில் ஏப்ரல் -2 ஆம் தேதி அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.கடந்த 2006 ஆம் ஆண்டு பெரும்பான்மை பெற்ற மாநிலக்கட்சிகள் டெல்லியில் அலுவலகம் அமைத்துக்கொள்ள நிலம் ஒதுக்கப்பட்டது.அதன்படி தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அண்ணா-கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டு,தற்பொழுது அதன் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வரும் சனிக்கிழமையன்று (02.4.2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.இவ்அறிவாலயம்திராவிட மாடல் கோட்டையாக டெல்லியில் திகழும்.மத்திய டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் (DDU) மார்க் என்ற இடத்தில் பாஜகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது..
Tags :