இயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்
இயக்குனர் ஷங்கர் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் அப்பா பெயர் சண்முகம் அம்மா பெயர் முத்துலட்சுமி. ஷங்கர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற 2 பிள்ளைகள் உள்ளார்கள். தற்போது இயக்குனர் ஷங்கர் கமலஹாசனை வைத்து “இந்தியன் 2” என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ஷங்கரின் தாயார் .முத்துலக்ஷ்மி வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. ஷங்கரின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தற்போது தாய் உயிரிழந்துள்ளார்.இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் .
Tags :