ஆசைக்கு இணங்க மறுத்த தம்பியின் மனைவி குழந்தை தீயிட்டு எரித்து கொலை செய்த கொடூரம்

by Staff / 03-04-2022 03:07:15pm
ஆசைக்கு இணங்க மறுத்த தம்பியின்  மனைவி  குழந்தை  தீயிட்டு எரித்து கொலை செய்த கொடூரம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தம்பி மனைவியை தீவைத்து எரித்துக் கொலை செய்த கொடூரனை போலீசார் கைது செய்தனர்.

பெரிய மறையூர் வலசை சேர்ந்த சிவகுமார் அஞ்சலி தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அஞ்சலி தனியாக ஆடு மேய்க்கச் செல்வதே நோட்டமிட்டு வந்த சிவக்குமாரின் சகோதரர் கருப்பையா அவரை பின் தொடர்ந்து சென்று தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார்  ஆனால் அஞ்சலி மறுப்பு தெரிவித்ததால்.

ஆத்திரமடைந்த கருப்பையா அவரையும் அவரது 2 வயது குழந்தையும் இரக்கமின்றி கத்தியால் தாக்கி தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளான்.

இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலையாளி கருப்பையா தான்  என்பதை அறிந்து அவனை கைது செய்தனர்.

 

Tags :

Share via