ஆலய வாசலில் பூஜைபோட்ட புது பைக் வெடித்தது.மக்கள் அலறியடித்து ஓட்டம்
ஆந்திரமாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கசாபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் புதியதாக வாங்கிய புல்லட் மோட்டார் சைக்கிளை கம்பெனியிலிருந்து டெலிவரி எடுத்துவிட்டு நீண்ட தூரம் இயக்கிய அவர் அவருக்கு விருப்பமான ஆலயத்தில் பூஜை போடுவதற்காக ஆலயத்தின் வாயிலில் அந்த வாகனத்தை நிறுத்தினார்.அப்போது பூசாரி புது பைக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்யும் போது போது பைக்கில் தீடீரென பற்றிய தீ காரணமாக பெட்ரோல் டேங் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து சிதறியது.இதனைக்கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.இந்த தீ விபத்தில் அந்தபகுதியில் நின்ற ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது.புதிதாக வாங்கிய புல்லட் பைக் தீக்கிரையானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : A new bike exploded at the entrance of the temple. People screamed and ran away