துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த மர்ம கும்பல்
டெல்லியில் சாலையில் நடந்து சென்றவர்களிடம் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விவேக் விஹார் பகுதியில் இரண்டு பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரில் ஒருவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகள் பணத்தை கொள்ளை அடித்தான்.
பின்னர் 2 பேரும் தங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டனர் இந்த காட்சிகள் யாவும் அங்கிருந்த சிசிடிவி பதிவாகி உள்ளது இதனால் அந்தப் பகுதியில் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :