மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளி உட்பட 4 பேர் பலி.

by Staff / 14-04-2022 11:50:44am
மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளி உட்பட 4 பேர் பலி.

விருதுநகரில் நேற்று மாலை பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.கருப்பசாமி நகரில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வீட்டின் மேல் தளத்தில் கட்டிட பணி நடந்த வேளையில் திடீரென மின்னல் தாக்கியதில் ரோசல்பட்டி சேர்ந்த ஜக்கம்மாள் (55) கருப்பசாமி நகரை சேர்ந்த ஜெயசூரியா( 22) வீட்டின் உரிமையாளரின் உறவினர்கள் முருகன்( 24) கார்த்திக் ராஜா (28 )உயிரிழந்தனர்

இவர்கள் நான்கு பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தீயணைப்பு துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில் 2 பேர் காயமடைந்த நிலையில் தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via