தமிழ்நாடு முன்னாள் டிஜிபி பி.கே. ரவி காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்

by Staff / 02-11-2023 05:08:00pm
தமிழ்நாடு முன்னாள் டிஜிபி பி.கே. ரவி காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரஜ் கிஷோர் ரவி. 1989ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான பி.கே.ரவி, தமிழ்நாடு காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கடந்தாண்டு தீயணைப்புத் துறை டிஜிபியாக பணியாற்றி வந்த பி.கே.ரவியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. பதவிக்காலம் முடிய 3 மாதங்கள் இருந்த நிலையில் திடீரென விருப்ப ஓய்வு பெற்றார். இந்த நிலையில், பி.கே.ரவி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். வரும் மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via