சுவாமி விவேகானந்தரும் மகரிஷி யும் கண்ட கனவு இந்தியாவில் பலிக்கப் போகிறது- மோகன் பாகவத்.

by Staff / 15-04-2022 01:53:48pm
சுவாமி விவேகானந்தரும் மகரிஷி யும் கண்ட கனவு இந்தியாவில் பலிக்கப் போகிறது- மோகன் பாகவத்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் இந்து மத துறவிகளின் மாநாடு நேற்று நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட மோகன் பாகவத், விவேகானந்தரும் மகரிஷி அரவிந்தரும் கண்ட கனவு இந்தியாவில் வெகு சீக்கிரமாக காணப்போகிறோம், இதில் சிலர் இதை காண்பதற்கு 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும் என என்கிறார்கள் ஆனால் என்னுடைய அனுபவத்தில் நான் கூறுகிறேன் 8 முதல்10 ஆண்டுக்குள் பார்த்துவிடுவோம்.

இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்து மத வளர்ச்சி அடையாவிட்டால் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமற்றது என சுவாமி விவேகானந்தர் தீர்க்கமாக கூறியிருக்கிறார். இதை மனதில் நிறுத்தி நாம் செயல்பட வேண்டும்.

இந்தியா தனது வளர்ச்சியை நோக்கி அதிவேகமாக பயணிக்கத் தொடங்கி விட்டது அதனால் யாரும் குறுக்கே வந்து விடாதீர்கள் உங்களுக்கு தேவை என்றால் என்னுடன் சேர்ந்து நீங்கள் பயணிக்கலாம் அந்த பயணத்தை தடுத்து நிறுத்த நினைத்தாள், அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள், இல்லையெனில் அவர்களின் கதை முடிந்துவிடும். இந்தியா அகிம்சைப் பாதையில் செல்லும் நாடுதான் அதே சமயத்தில்  பெரிய தடியையும் கையில் வைத்திருக்கும், ஏனெனில் அதிகாரத்துக்கு தான் இந்த உலகம் செவிசாய்க்கும் ஆகவே இந்த அதிகாரம் கையில் தெரியும்படி இருக்க வேண்டும், என்று அவர் பேசினார்.

 

Tags :

Share via