அமைச்சர் பொன்முடி கார் மோதி ஒருவர் படுகாயம்.
கடலூரில் திமுகஅரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்நிலையில், கூட்டம் முடிந்து விழுப்புரத்திற்கு பொன்முடி காரில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. கார் காராமணிகுப்பம் சந்தை எதிரே விபத்திற்கு உள்ளானது விபத்தில் தலையில் படு காயமடைந்த நபர் கண்ணன் என்பவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் காரின் முன்பகுதியும் சேதமடைந்தது. இந்த விபத்தில் சிக்கிய நபரை அமைச்சர் பொன்முடியின் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அமைச்சர் வாகனத்தை விட்டு இறங்காமல் வாகனத்திலேயே அமர்ந்து இருந்த சம்பவம் விபத்து நடந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :