மகனின் இழப்பிற்கு நீதிகேட்டு சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தாயே திட்டிய அதிகாரி

by Staff / 23-04-2022 12:26:36pm
மகனின் இழப்பிற்கு நீதிகேட்டு சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தாயே திட்டிய அதிகாரி

 உத்தரப்பிரதேசத்தில் மகனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தா தாயே அதிகாரி ஒருவர் விரலை நீட்டி  திட்டும் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது காசியாபாத் மோடி நகர் பகுதியில் கடந்த 20ஆம் தேதி பள்ளி பேருந்தில் சென்ற சிறுவனுக்கு குமட்டல் ஏற்பட்டு  ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியா போது மின்கம்பத்தில் மோதி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி விபத்தில் பலியான 10 வயது சிறுவன் அனுராக் பரத்வாஜின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கோட்டாட்சியர் ஸ்ரீ பங்கிலா மகன் இறந்த துக்கத்தில் அழுது புலம்பிக் கொண்டிருந்த பெண்ணை பார்த்து வாயை மூடி அமைதியாக இருக்கும்படி விரலை நீட்டி திட்டியதாகவும்கூறப்படுகிறது 

 

Tags :

Share via