2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

by Editor / 24-04-2022 08:01:09am
 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி வேடப்பன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 24). இவர் கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில் இருந்த போது, இருப்பாளி அம்மன் செட்டி கொட்டாய் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (35), மேச்சேரி சூரகவுண்டன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த தங்கம் என்ற கிருஷ்ணன் (29) ஆகியோர் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த மஞ்சுளாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, 7 பவுன் தங்க நகைகள், ¼ கிலோ வெள்ளி பொருட்கள், செல்போனை அவர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து மஞ்சுளா கொடுத்த புகாரின்பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், கிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த திருட்டு வழக்கு விசாரணை ஓமலூர் சார்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முடிந்து  தீர்ப்பு கூறப்பட்டது.இதில் குற்றம்சாட்டப்பட்ட, வெங்கடேசன், தங்கம் ஆகிய 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 3 ஆண்டுகள் சாதாரண காவல் தண்டனையும் என மொத்தம் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் சார்பு நீதிபதி அஸ்பக் அகமது உத்தரவிட்டார்.

 

Tags :

Share via