இந்து அறநிலை துறை ஆணையர் அலுவலகத்தில் 15 கோடி மதிப்பில் கட்டிடங்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல்  

by Editor / 25-04-2022 04:35:10pm
இந்து அறநிலை துறை ஆணையர் அலுவலகத்தில் 15 கோடி மதிப்பில் கட்டிடங்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல்  

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்..39.913 சதுர அடியில் நான்கு தளங்கள் அதிகாரிகளுக்கு தனித்தனி அறை திருக்கோயில் புத்தக விற்பனை நிலையம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. மேலும் 2021 2022 மானிய கோரிக்கையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்கள் 1500 பேருக்கு பணி வரன்முறை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு கோவில்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றி 175 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது இதற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

 

Tags :

Share via