தமிழகத்தில் புதிதாக 1,630 பேருக்கு  கொரோனா; 17 பேர் பலி

by Editor / 28-09-2021 07:46:54pm
தமிழகத்தில் புதிதாக 1,630 பேருக்கு  கொரோனா; 17 பேர் பலி



தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,630 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 17 பேர் உயிரிழ்ந்தனர்.
தமிழகத்தில்  1,657 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது.


தமிழக  கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை (செப்.27) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாக 1,630 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,60,553-ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஒரு நாளில் மட்டும் பலி எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை35,526-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து 1,643 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,07,796-ஆக அதிகரித்துள்ளது.


 கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 17,231பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செவ்வாய்  ஒரு நாளில் மட்டும் 26,60,553 பேருக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via