உக்ரேன் -ரஸ்யா போர் நோயாளிகளுக்கு மருந்து வழங்க முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர்.

by Staff / 06-05-2022 01:47:22pm
உக்ரேன் -ரஸ்யா  போர் நோயாளிகளுக்கு மருந்து வழங்க முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர்.

 போரால் உக்ரைனில் மருத்துவ கட்டமைப்பு சேதமடைந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாமலும் கேன்சர் நோயாளிகளுக்கு மருந்து வழங்க முடியாமலும் மருத்துவர்கள் தவித்து வருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் .உக்ரேனுக்கா  இங்கிலாந்தில் நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் காணொளி மூலம் பேசிய ஜெலன்ஸ்கி ரஷ்ய தாக்குதல்களால் 400க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.தற்போது போர் உக்கிரமாக நடைபெற்று வரும் கிழக்கு உக்ரைனில் சாதாரண மருத்துவ கூட தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via