ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களுடன்  ஊர்வலம்

by Editor / 15-05-2022 08:32:36am
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களுடன்  ஊர்வலம்

திருச்சி மாவட்டம் . மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி அதிகாலையிலேயே, பச்சை மூங்கில் மரத்தில் கொடியேற்றம் நடந்த பின்னர், வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களுடன்  ஊர்வலமாக புறப்பட்டு ராஜவீதிகளின் வழியாக பால் குடங்களை சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via