டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 21 ல் நடைபெறும்

by Admin / 17-05-2022 09:45:24pm
டி.என்.பி.எஸ்.சி  குரூப் 2  தேர்வு திட்டமிட்டபடி மே 21 ல் நடைபெறும்



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ  தேர்வு வருகிற மே 21 ந்தேதி,தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலுள்ள  117 மையங்களில் நடைபெற உள்ளது.தேர்வு எழுதும் தேர்வர்கள்காலை 8.30 மணிக்குள் தேர்வறைக்குள் வர வேண்டும். 9.00 மணிக்கு பின்னர் வருபவர்கள் தேர்வெழுதஅனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.இதில்ஆண்கள் 4.95 லட்சம்,பெண்கள் 6.81 திருநம்பி-நங்கையர் 48  பேர் ,தமிழ் வழி பயின்றோர் 79,942 பேர் விண்ணப்பித்துள்ளனர்.சென்னையிலுள்ள மையங்களில்1,15,843பேர்தேர்வெழுதஉள்ளனர்.குறைந்தளவு 5624பேர் நீலகிரியில் மூன்று மையங்களில் எழுதவுள்ளனர் தேர்வை கண்காணிக்க 6,400 குழுக்களும் 333 பறக்கும்படைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்வு முடிவு ஜீன் மாத இறுதியில் வெளியிடத்திட்டமிடப்பட்டுள்ளதாகவும்தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். ..

 

Tags :

Share via