குஜராத் சட்டப்பேரவை தேர்தல் 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு - பலத்த பாதுகாப்பு

by Editor / 01-12-2022 08:24:29am
 குஜராத் சட்டப்பேரவை தேர்தல் 89 தொகுதிகளுக்கு  இன்று வாக்குப்பதிவு - பலத்த பாதுகாப்பு

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சௌராஷ்டிரா பகுதியில் உள்ள 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத்தில் இதுவரை பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையேதான் நேரடி போட்டி இருந்து வந்தது. ஆனால் இம்முறை மூன்றாவது அணியாக ஆம் ஆத்மி களத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி நுழைவதால் போட்டி கடுமையாகி வருகிறது. பஞ்சாபைத் தொடர்ந்து, குஜராத்திலும் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுமா என்று தேசிய அரசியல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 181 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு வேட்பாளர்கள் உள்ளனர்.

முதல்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 718 பேர் ஆண்கள், 70 பேர் பெண்கள். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும். 93 தொகுதிகளுக்கு அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

Tags :

Share via