கிருஷ்ணகிரி தொகுதி தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய உத்தரவு

by Staff / 25-03-2024 12:45:16pm
கிருஷ்ணகிரி தொகுதி தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய உத்தரவு

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை 20 நாட்களில் சரிபார்த்து மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் மறு எண்ணிக்கைக்கு தேவையான உதவிகளை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via