ரயிலில் அடிபட்டு பல் மருத்துவர் பலி
சிகிச்சைக்காக வந்த இளம் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பல் மருத்துவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கர்நாடகா மாநிலம் குந்தபுரத்தில் ரெயிலில் அடிபட்டு இறந்த நிலையில் பதியடுக்காவில் உள்ள தனியார் கிளினிக்கில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி (52) உயிரிழந்தார். நேற்று முன்தினம் பதியடுக்காவில் உள்ள கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணிடம் கிருஷ்ணமூர்த்தி தவறாக நடந்துகொண்டதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த நிலையில், ரயிலில் அடிபட்டு பல் மருத்துவர் பலியானதை அடுத்து, குந்தபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :