காய்ச்சலுக்கு 2 பேர் பலி; நிபா வைரஸ் என சந்தேகம்

by Staff / 12-09-2023 04:07:18pm
காய்ச்சலுக்கு 2 பேர் பலி; நிபா வைரஸ் என சந்தேகம்


கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் காய்ச்சலால் 2 பேர் உயிரிழந்தனர். நிபா வைரஸ் தொற்று சந்தேகம் உள்ளதால் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இறந்தவரின் உடல் திரவங்களின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சந்தேகம் தெரிவித்ததையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. உயிரிழந்தவரின் உறவினர்கள் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே நிபாவை உறுதி செய்ய முடியும். நோயாளிகளுடன் தொடர்பு கொண்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்திலும் டெங்கு பரவி வருகிறது.

 

Tags :

Share via