முன்னாள் ராணுவ வீரர் சுட்டு கொலை

by Staff / 10-03-2023 11:24:42am
முன்னாள் ராணுவ வீரர் சுட்டு கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் மினேபுரி மாவட்டத்தில், வயலில் உருளைக்கிழங்கு தோண்டுவதில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் ராணுவ வீரரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோட்வாலி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via