2 குட்டி யானைகள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது.

by Editor / 31-03-2023 10:17:50am
 2 குட்டி யானைகள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது.

தருமபுரியில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்ததால் தனித்துவிடப்பட்ட 2 குட்டி யானைகள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது.20 நாட்களாக வனத்துறையினர் தேடி வந்த நிலையில், தருமபுரி - கிருஷ்ணகிரி எல்லையில் உள்ள பெட்டமுகிலாளம் வனப்பகுதியில் இரு யானைகள் ஆரோக்கியமாக சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.தொடர்ந்து 2 யானைகளும் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via