தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிய தடை

by Staff / 15-11-2023 01:06:00pm
தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிய தடை

கர்நாடக பணியாளர் தேர்வாணையம் அரசு போட்டித் தேர்வுகளில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதாவது. வரும் காலங்களில் தேர்வு மையங்களில் தலைப்பாகை, ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை. அதே சமயம் தாலி, கழுத்து சங்கிலி உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பலர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்திருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via