திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு -முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்.பு மனு தாக்கல்.

by Staff / 25-03-2024 01:24:21pm
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு -முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்.பு மனு தாக்கல்.

ஸ்ரீபெரும் புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் ராஜிடம் வேட்புமனுவை நிர்வாகிகளுடன் சென்றுதாக்கல் செய்தார். ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் கடைசி நாள் என்பதால்  பல்வேறு கட்சிகளில் வேட்பாளர்களும் மாநிலம் முழுவதும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்..

பா.ஜ.க கூட்டணி சார்பில்  ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் அவர் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் அ.ம.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணி கட்சி .நிர்வாகிகளும் உடனிருந்தனர்.. முன்னதாக வேட்பு மனுவில் கையொப்பமிட்டு, ராமநாதபுரம் அருள்மிகு விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் சாமி தரிசனம் செய்தார்.

 

Tags :

Share via