விஷச்சாராயம் குடித்த.. 9 பேர் குணமடைந்தனர்

by Staff / 21-05-2023 04:01:23pm
விஷச்சாராயம் குடித்த.. 9 பேர் குணமடைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் விஷச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், விஷச்சாராயம் குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், தற்போது 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விஷச்சாராயம் தயாரித்த மற்றும் விற்பனை செய்த பலரை கைது செய்து சிறையில் அடைத்தது.

 

Tags :

Share via